என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, January 31, 2010

ஏன் உன் மனைவி வரலை?


"என்னங்க இது... திடீர்னு இப்படிச் சொன்னா எப்படி? நேத்து வரை ஜனார்த்தனன் பொண்ணு கல்யாணத்துக்கு நாம ரெண்டு பெறும் போகிறதாதானே இருந்தது? இப்ப திடீர்னு நீங்க மட்டும் போறதா சொல்றீங்களே?" ஏமாற்றத்துடன் கணவன் கணேசனிடம் கேட்டாள்.

"இல்ல மீனா, எனக்கு மதுரைல திடீர்னு இன்ஸ்பெக் ஷன் போட்டுட்டாங்க. கல்யாணத்துல தலைய காட்டிட்டு அப்படியே டிரெயின் எறிடறேன்!"

"என்னமோ போங்க. கல்யாணத்துக்குன்னு புதுசா புடவைலேர்ந்து சகலமும் வாங்கியிருந்தேன். ம்... ஏமாற்றத்துடன் சமையலறைக்குள் புகுந்தாள் மீனாட்சி.

திருமண மண்டபத்தில்...

"என்னடா நீ மட்டும் வந்திருக்க? உன் மனைவியையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமே?" கேட்ட ஜனார்த்தனனை ஓரமாக அழைத்துச் சென்றான் கணேசன்.

"பத்து நாளைக்கு முன்னாடி உன் வீட்டுக்கு வந்திருந்தப்ப என்ன சொன்ன? உன் பெண்ணுக்கு சீர் கொடுக்கப் போற பீரோ,கட்டில்,மெத்தை,மைக்ரோவேவ் அவன், கிரைண்டர், வாஷிங்மெஷின், பாத்திரங்கள்,புத்தம் புது கார்... எல்லாத்தையும் கல்யாண மண்டபத்துல காட்சிக்கு வைக்கப் போறேன்னு சொன்னல்ல? அதனாலதான் என் பெண்டாட்டிய கூட்டிட்டு வரலை..."

"என்னடா சொல்ற?"

"பின்னே என்னடா... என் பையனுக்கு வரன் பேசி முடிச்சிருக்கேன். சீர் பத்தி பேச அடுத்த வாரம் அவங்க வீட்டுக்குப் போறோம். இந்த நேரத்துல நீ ஷோவுக்கு வச்சிருக்கற சீரை என் பெண்டாட்டி பார்த்தா, அவளுக்கும் இதெல்லாம் வேணும்னு ஆசை வந்துடாதா? அதனாலதான் அவள கூட்டிட்டு வரலை!" என்றான் கணேசன்.

(21.8.2008 "குங்குமம்" இதழில் வெளியான என் ஒருபக்கக் கதை.)
"சிறியவர்களுடன் பழகினால் மனது இளமையாகும்! பெரியவர்களுடன் பழகினால் அறிவு விருத்தியாகும்! சமமானவர்களுடன் பழகினால் மகிழ்ச்சி அதிகமாகும்!"

11 comments:

  1. வாஸ்தவம்தான்.. நல்ல மெசேஜ்

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க ஐயா!

    ReplyDelete
  3. ஜனா என படிச்சதும் உங்க நண்பர் எழுத்தாளர் ஜனா நினைவு வந்தது.

    சார் நீங்க இப்ப நம்ம ப்ளாக் பக்கம் ஓட்டு போட மட்டும் தான் வர்றீங்க. ஓட்டுக்கு நன்றி. கமெண்டும் முன்பு போல் போடலாமே?:))

    ReplyDelete
  4. வாவ்!!! இத படிக்கக் கொள்ள உடம்பெல்லாம் புள்ளரிச்சிதுங்க!!!

    ReplyDelete
  5. கதை நல்ல இருக்கு. எல்லாரும் இந்த மாதிரி யோசிச்சா, வரதட்சினை கொடுமை கொஞ்சமாவது குறையும்.

    வெங்கட் நாகராஜ்
    புது தில்லி.

    ReplyDelete
  6. "அய்யா, தங்கள் ஒரு பக்க கதை நன்று. அது சொல்லும் செய்தியும் நன்று.ஆனால் தற்காலத்துக்கு பொருந்தாத ஒன்று. இப்போது, கல்யாணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் முதலில் ஐந்து இலக்க ஊதியம்,, மேலும் குடியிருக்க சொந்த வீடு, மற்றும் சொகுசு நானகு சக்கர வாகனம் என்று தன்னை தயார் படுத்திக் கொள்ளவேண்டும். பிறகுதான் திருமணத்தைபற்றி யோசிக்கவேண்டும். இது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டதென்பது மறுக்க இயலாத உண்மை."

    மந்தவெளி நடராஜன்.

    ReplyDelete
  7. "அய்யா, தங்கள் ஒரு பக்க கதை நன்று. அது சொல்லும் செய்தியும் நன்று.ஆனால் தற்காலத்துக்கு பொருந்தாத ஒன்று. இப்போது, கல்யாணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் முதலில் ஐந்து இலக்க ஊதியம்,, மேலும் குடியிருக்க சொந்த வீடு, மற்றும் சொகுசு நானகு சக்கர வாகனம் என்று தன்னை தயார் படுத்திக் கொள்ளவேண்டும். பிறகுதான் திருமணத்தைபற்றி யோசிக்கவேண்டும். இது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டதென்பது மறுக்க இயலாத உண்மை."

    மந்தவெளி நடராஜன்.

    ReplyDelete
  8. ஒவ்வொரு கதையும் அருமையாக இருக்கிரது ...வாழ்த்துக்கள்....நல்ல சம்பவங்களை மிக அழகாக கோர்க்கிறீர்கள்..நன்றிhttp://swthiumkavithaium.blogspot.com/

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "