என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, October 19, 2013

கதைத் திருடர்களுக்கு கருட புராணத்தில் என்ன தண்டனை?


13.8.99 "குங்குமம்" இதழில் எனது நண்பர் "அமுதகுமார்" எழுதி வெளியான கீழே உள்ள கதையை  





போளூர் சி.ரகுபதி என்பவர் கதையை வரிக்கு வரி எழுதி இரண்டு ஆண்கள் பேசுவதாக இருந்ததை  இரண்டு பெண்கள் பேசுவதாகவும் பெண் குழந்தையை ஆண் குழந்தையாகவும் மாற்றி எழுதி அது 16.10.2013 குமுதம் இதழில் வெளியாகி உள்ளது. 

அது கீழே:-




இதற்கு முன் என் இன்னொரு நண்பர் "புதுவை சந்திரஹரி" என்பவரின் கதையை இதே  நபர் வரிக்கு வரி எழுதியிருந்ததை "முக நூல்" மற்றும் "ட்விட்டர்" ஆகிய தளங்களில் குறிப்பிட்டிருந்தேன். இப்போது இது.  தெரியாமல் இன்னும் எத்தனையோ? சொந்த சரக்கு இல்லாதவர் இன்னொருவரின் படைப்பைத் திருடி எழுதினால் அதற்கு கருட புராணத்தில் என்ன தண்டனை என்பதை "அந்நியன்" அம்பியிடம் யாராவது கேட்டு சொல்லுங்களேன்!